Monday, July 1, 2013

இலங்கையின் நிலைமையைக் கண்ணாறக் காண வந்தே தீருவேன்! – நவநீதன் பிள்ளை

இலங்கையின் நிலைமையைக் தன் கண்களால் காண எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதன் பிள்ளை குறிப்பிட்டார்.

அந்தப் பயணத்தின்போது இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினருடன் தான் கலந்தாலோசிக்க எண்ணியுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய வானொலி நிலையத்தின் பிபிஸி உலக சேவை நேற்று முன்தினம் (29) அவருடன் கண்ட செவ்வியின்போதே அவர் இவ்விடயம் பற்றித் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கவுள்ள இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்களால் காணமுடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிபிஸி உலக சேவைக்கு கருத்துரைத்த நவநீதன் பிள்ளை தொடர்ந்து குறிப்பிடும் போது, போரின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச ரீதியில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைச் சரியாக்க் கண்டுபிடித்து அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  July 2, 2013 at 9:26 AM  

Why not you go to Syria.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com