Tuesday, July 9, 2013

‘வாஸ் எனது மகனைக் கொன்றான்’ நீதிமன்ற முன்றலில் வாஸ் முன் ஒப்பாரிவைக்கிறாள் ஒரு தாய்!

எனது மகன் பாதாள உலக்க் கோஷ்டியினருடன் சம்பந்தமுடையவன் எனக் கூறி, அவனைக் கைதுசெய்து அவனைக் கொன்றாய்...! என்று இன்று (09) கொழும்பு புதுக்கடை நீதிமன்ற முன்றலில் தாயொருத்தி வைத்த ஒப்பாரியானது நீதிமன்ற முன்றலில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

கொழும்பு வடக்கிற்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தன இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் காவற் சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது அவ்விடத்திற்கு வந்த தாயொருத்தியினால் இவ்வாறு ஒப்பாரி வைக்கப்பட்டு வாஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment