Friday, July 12, 2013

நான் அவ்வாறு கூறவில்லை-வீரவன்ச

வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் பதவி விலகு வதாக நான் கூறவில்லை எனவும், தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தத்திலுள்ள பிரிவினைவாதத்திற்கு வழி வகுக்கும் சரத்துகளை நீக்குமாறு மட்டுமே கோரியிரு ந்தேன் என, பொறியியல் நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அமைச்சர் கூறினார். வாய்மூல விடைக்காக கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாஸ எம்.பி. வட மாகாண தேர்தலை நடத்தினால் பதவி விலகுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறியது குறித்து வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் பதவி விலகுவதாக நான் கூறவில்லை எனவும் 13 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதனை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதோடு, இதற்காக தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக் குழுவினூடாக தேவையான மாற்றங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com