Sunday, July 14, 2013

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் உயிரிழப்பு - ஆலையடிவேம்பில் சம்பவம்

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் மருமகனின் தாக்குத லுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறை சமரசப்படுத்த முற்பட்டபோது பொல்லால் தாக்கப்பட்ட குறித்த பெண், கடந்த மாதம் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான மருமகன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com