Wednesday, July 10, 2013

கொக்குவில் கொள்ளை சம்பவம் தொடர்பாக நால்வர் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், 40 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய தங்காபரணங்களை கொள்ளை யிட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில், நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.

சந்தேகநபர்களில் இருவர், களவாடப்பட்ட தங்காபர ணங்களை வங்கியொன்றில் அடகு வைக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதானவர்கள் இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளனர் எனவும், கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment