Tuesday, July 30, 2013

யாழில் போட்டியிடும் ஈ.பி.டி.பி & ஆளும்கட்சி வேட்பாளர்கள் விபரம்

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) 10 ஆசனங்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியை (ஈ.பி.டி.பி) சேர்ந்த சின்னத்துரை தவராஜா போட்டியிடுவதுடன், க. கமலேந்திரன், ஐ.சிறீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன் இதில் ஒரு பெண் வேட்பாளரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சிறீலங்கா சுதந்திர கட்சியில் இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ்.பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன், எஸ்.கதிரவேல் ஆகியோரும் லங்கா சமசமஜாக் கட்சியில் ந.தமிழழகன் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் எம்.எம். சீராஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

No comments:

Post a Comment