Wednesday, July 3, 2013

காத்தான்குடி, ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தின் அதிபர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு காத்தான்குடி, ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தின் அதிபர் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் மீது நேற்றிரவு இனம் தெரியாதோரிக் தாக்குதலுக்கு உள்ளான தாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி மௌலவி றிபாய் அவரது காங்கேயனோடை யிலுள்ள ஈரான் வீட்டுத்திட்ட வீட்டில் இருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற இனந்தெரியாத மூவர் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் போத்தல்களால் தன்னை தாக்கியதாக பொலிஸ் முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment