Tuesday, July 2, 2013

தொலைபேசி ஒன்று பிரிதொரு தரப்பால் ஒட்டுக்கேட்கப்படுகின்றதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

கைடயக்க தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கான உபகரணங்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு ள்ளன

கைடயக்க தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கான உபகரணங்கள், கணனி பாகங்கள் என்ற போர்வையில், இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, மற்றும் சில இலங்கை தூதுவர்களின் தொலைபேசிகள் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளினால் ஒட்டுக்கேட்கப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த உபகரணங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

ரொவின் பக் என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, தொலைபேசி உரையாடல்கள் செவிமடுக்கும் நடவடிக்கைகள் வெளிநாடுகளில் செயற்படுத்தப்படுகிறது எனினும் ஒரு நாட்டின் புலனாய்வுச் சேவையின் வெளிநாட்டு விசாரணை சட்டத்தின் கீழ் மாத்திரமே இதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்படு குறிப்பிடத்தக்கது.

கையடக்க தொலைபேசி பயன்படுத்தப்படாத நிலையில், அதன் பட்டரி சூடேறுதல், தொலைபேசி அடிக்கடி வெளிச்சத்தை வெளியிடுதல், பீப் என்ற சத்தம் ஏற்படுத்தல், என்பவற்றின் மூலம் தொலைபேசி ஒன்று பிரிதொரு தரப்பினரால் செவிமடுக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என இலங்கை புலனாய்வுப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com