Friday, July 12, 2013

சில விஞ்ஞானிகள், மாவீரர்களை பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!

விஞ்ஞானி என்றால் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள் ளும் ஒருவர் என்றும் கருதுவது வழக்கம்.. எனினும் ஒவ்வொருவரது வாழ்க்கையும், வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் ஒன்றில் ஞானத்தாலோ அல்லது விஞ்ஞானத் தாலோ நகர்த்தப்படுகின்றது.

விஞ்ஞானம் என்பது "எது எதனால் என ஆய்வு செய்து அது அதனால் எனக் கூறுவது" என பொருள்படும். விஞ்ஞானம் அறிவு சார்ந்தது. ஆராய்ச்சிக்கு இடமளிப்பது ஒன்றில் இருந்து எம்மை வேறுபடுத்தி, விலகவைத்து அது சார்ந்த விடயங்களை ஆய்வு செய்வது என பொருள்படும். இவ்வாறான விஞ்ஞானிகள், மாவீரர்கள், அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்களை பார்போமேயானால்,

தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

அறிஞர்கள் சோக்ரடிசும், ஹோமரும் எழுதப், படிக்கத் தெரியாதவர்கள்.

மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com