Friday, July 5, 2013

வடமாகாண சபை தேர்தல் ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன வெளியிட்டுள்ளார். ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கைச்சாத்திடப்பட்டதன் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.

இதன்படி 1987 நவம்பர் 14 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்ததுடன் 1988 பெப்ரவரி 3 ஆம் திகதி ஒன்பது மாகாணசபைகளும் உருவாகக்ப்பட்டதுடன் மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28ஆம் திகதி வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு நடைபெற்றது.

1988 ஜுன் 2 ஆம் திகதி மத்திய மாகானம் மற்றும் தெற்கு, மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஏழு மாகாண சபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 டிசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது மட்டும்லாது இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதுடன் 1988 செப்டம்பர் 2 திகதி அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜயவர்தன இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து 1988 நவம்பர் 19 திகதி வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெற்றி பெற்றது மீண்டும் 1993 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் நடைபெற்றது.

3வது மாகாணசபைத் தேர்தல்களும் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன.

4வது மாகாணசபைத் தேர்தல்கள் ஏழு மாகாணங்களுக்கு 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன

5வது மாகாண சபைத் தேர்தல்கள் வடக்கு மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களுக்கு நடத்தப்பட்டபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்கேற்கவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com