Sunday, July 14, 2013

நெதர்லாந்து பெண் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரால் கொடூரமாக கற்பழிப்பு!

நெதர்லாந்தை சேர்ந்த 21 வயது பெண் கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார் அப்போது, ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலபியோ அந்தோணி கிரனடா (46), ஜெனீபர் பீஸ்டன் (32), ஆகிய 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களுடன் நட்பாக பழகினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த நபர்கள் அப்பெண்ணை கடத்தி சென்று மெல்போர்னில் உள்ள மற்றொரு ஓட்டலில் அடைத்து வைத்தனர். பின்னர் அவரை 2 மாதமாக 60 தடவைக்கும் மேல் கற்பழித்துள்ளனர். அங்கிருந்து தப்பிக்க முயன்ற அப்பெண்ணை அடித்து உதைத்துள்ளதுடன் கியாஸ் லைட்டரால் சூடு வைத்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே அங்கிருந்து தப்பிய பெண் பொலீசில் புகார் செய்ததையடுத்து பொலீசார் வழக்கு பதிவு செய்து குறித்த 2 பேரையும் கைது செய்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment