Friday, July 19, 2013

யாழ். கிளி ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டும் வகையில் யாழ், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 23ஆம் திகிதி காலை 8.30 மணிமுதல் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அரசாங்க தகவல் தினைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கருத்தரங்கில் தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவடடங்களில் மேற்க்கொள்ளப்பட்டு வரும் அரச அபிவிருத்தி செயல் திட்டங்கள் சம்பந்தமான அறிவூட்டலை மேற்கொள்ளும் வகையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ள்கின்றனர்.

இக்கருத்தரங்கு கொழும்பில் இருந்து வருகைதரும் வளவாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment