Tuesday, July 30, 2013

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்து; பொலிஸ் அதிகாரி பலி

ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி மட்டக்களப்பு பிள்ளையாரடியில் மின்கம்பத்தில் மோதியதில் விபத்து நடைபெற்றதுடன் இந்த விபத்துச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உயிரிழந்தவர் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் அமீர் என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை இந்தச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment