தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தைச் சேர்ந்த, இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை வெளியேற்றப் பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
தற்போது பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக் குறை காரணமாக இரண்டாம் வருட மாணவர்களுக்காக விசேட விடுதி வசதி நிந்தவூர் பிரதேசத்தில் பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், பல்கலைக்கழத்திற்குள்ளேயே விடுதி வசதி வழங்கப்பட வேண்டும் என இரண்டாம் வருட மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப் படுகின்றது.
No comments:
Post a Comment