Monday, July 8, 2013

மகாபோதி குண்டுவெடிப்பையடுத்து இலங்கை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இந்தியாவின் புத்தகாயாவிலுள்ள மகாபோதி கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னை நகரில் இயங்கிவரும் இலங்கைசார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிணங்க எழும்பூரிலுள்ள மாஹாபோதி சமூகத்தின ருக்கும், நுங்கப்பாக்கத்திலுள்ள இலங்கை துணைதூதர கத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளில் 5,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment