Friday, July 26, 2013

திருநெல்வேலியில் தடம்புரண்டது பாரவூர்தி!

கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த கொள்கலன் வாகனம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பாதையை விட்டு விலகி அப்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதித் தடம் புரண்டதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் யாழ் மாவட்டத்திற்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

யாழ் மாவடடத்திற்கான மின் இணைப்பு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் புதிய மின்கம்பம் இணைக்கும் பணியில் மின்சாரசபை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment