Thursday, July 4, 2013

பிரான்ஸிலிருந்து வந்த நபரை மார்புக் கச்சையால் கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ள மனைவி!

பாணந்துறையில், பாடசாலை ஒன்றுக்கு அருகில் கார் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில், பண்டாரகம அலுபோமுல்லையை வசிப்பிட மாக கொண்ட ஒரு குழந்தையின் தாயான, 39 வயதுடைய மேரஞ்ஜ ஹேவகே சஞ்ஜீவனி தேவிகா என்ற பெண் தனது சட்டத்தரணியின் மூலமாக பாணந்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினார்.

இவ்வாறு சரணடைந்த பெண்மணி, கொலைசெய்யப்பட்ட நபரின் கள்ள மனைவியென்றும், தன்னுடைய மார்பு கச்சையால் கழுத்தை நெரித்தே கொலை செய்துள்ளதாகவும், பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்தே, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் ரூவீர வெலிவன்ன உத்தரவிட்டார்.

40 வயதான பிரதீப் தேவநாராயன கங்கொடவில நுகேகொடையை வசிப்பிடமாக கொண்டவர். எனினும் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழ்ந்து வந்த இவர் இலங்கைக்கு திரும்பியிருந்த நிலையில் கடந்த 01 ஆம் திகதி பாணந்துறையில் காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment