Thursday, July 4, 2013

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸின் மனைவி நீதிமன்றில் ஆஜர்!

மொஹமட் ஷியாம் படுகொலை வழக்கில் கைதுசெய்யப் பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்..

மொஹமட் ஷியாம் படுகொலை வழக்கில் தனது கணவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் சாட்சியாளர்களுக்கு வாஸின் மனைவி அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, அவரை நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் அன்று உத்தர விட்டிருந்த நிலையிலேயே வாஸ் குணவர்தனவின் மனைவி இன்று நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியுடன் ஆஜராகியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com