Thursday, July 4, 2013

சிங்களவர்கள் நாடு இரண்டுபடும் என்று சந்தேகிப்பதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துகிறார் தயா மாஸ்டர்!

அதற்கு முதல் காரணம் புலம்பெயர்ந்திருக்கின்ற ஈழத் தமிழ்த் தனவந்தர்கள் மற்றும் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இலங்கை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் நாடு இரண்டுபடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் குறிப்பிடுகிறார்.

யுத்தம் முடிவடைந்த போதும்,இன்னும் புலம் பெயர் தமிழர்கள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மூலம் பெற்றுக்கொண்ட பணத்தை வைத்துக்கொண்டு வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்களின் தனியார் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே குறியாக நிற்பதாகவும் அவர் தெளிவுறுத்தினார்.

அதேபோல, நாட்டுக்கு வெளியே ஈழ நாடொன்றை அமைப்பதன் மூலம் சிங்கள மக்களும் அரசாங்கமும் இரண்டுபடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனால் ஈற்றில் நடைபெறுவது என்னவென்றால் வடக்கில் வாழும் அப்பாவிச் சனம் நாளுக்கு நாள் துன்பத்தை எதிர்நோக்குவதே என்றும் அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment