Thursday, July 11, 2013

என்.ஜி.ஓ. களின் மற்றுமொரு சூழ்ச்சி அம்பலம்! டொலர்களுக்கு விலை போகும் தொழிற்சங்கங்கள்

தொழிற்சங்கங்களுடாக அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சி களை முன்னெடுப்பதற்கு அரச சார்ப்பற்ற அமைப்புகள் மேற்கொள்ளும் சூழ்ச்சி தொடர்பாக தகவல்கள் அம்பல மாகியுள்ளது எனவும், அமைச்சுகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த சூழ்ச்சியை முன்னெடுப்பதற்கு, பல்லாயிரம் டொலர் ஒதுக்கப்படுவதாக, தகவல்கள் கிடைத்துள்ளதாக தாயக அலைவரிசை தெரிவிக்கின்றது.

நாட்டுக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப, எதிர்க்கட்சியின் சில கட்சிகளை பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான பாரிய சூழ்ச்சிகளை முன்னெ டுக்கும் வெளிநாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புகள், இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாக, தெரியவந்துள்ளது.

அரச விரோத தொழிற்சங்கங்கள் இதனுடன் தொடர்புபட்டுள்ளன. அடிப்படை இலக்குகளுள் சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மின்சாரம் போன்ற அமைச்சுகளை இலக்காக கொண்டு, இந்த தொழிற்சங்க சூழ்ச்சிகள் முன் னெடுக்கப்படுகின்றன.

இதுவரை சுகாதார துறையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களின் சூழ்ச்சியின் ஆரம்பகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் அம்பலமா கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார துறையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி இந்த தொழிற்சங் கங்களுடாக அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், இந்த தொழிற்சங்கங்களின் தலை மையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு துணை நிற்கும் ஒருவருக்கு, மாதாந்தம் பல்லாயிரம் டொலர் வழங்கப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இந்த சூழ்ச்சிகளின் பின்னணியில் ஜேர்மனியிலிருந்து செயற்படும் பிரட்ரிக் நஓமான் மன்றமும், பாரிய தூண்டுதல்களை முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் சேலைன் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, சுகாதார துறைக்கு எதிராக தொழிற்சங்க சூழ்ச்சிகளை, அரச சார்ப்பற்ற அமைப்பு ஒன்று முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலர்களினால் போசிக்கப்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் முக்கிய புள்ளியாக செயற்படும் ஒரு நபர் பின்னணியில் உள்ளார் எனவும் சுகாதாரத்துறை உட்பட ஏனைய துறைகளுடன் தொடர்புடைய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு பயிற்சிப்பாசறைகளை நடாத்தும் போர்வையில், அரசாங்கத்திற்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் புலம்பெயர் தமிழர்கள் சூழ்ச்சிகளை முன்னெடுக்கின்றன.

கடந்த காலங்களில் அரசிற்கு எதிரான அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தினோம் எனவும், அச்சுறுத்தல்கள் நிறை வடையாத போதிலும், தாயகத்தின் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில், தொழிற்சங்கங்களுடாக நாட்டுக்கு எதிராக என்.ஜி.ஓ. களால் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை நாம் தொடர்ந்தும் அம்பலப்படுத்துவோம் என தாயக அலைவரிசை மேலும் தெரிவித்துள்ளது

1 comment:

  1. National security Agents of the country have to play an important role to save the country.suffering of Some countries are really a good
    lesson for us.

    ReplyDelete