Thursday, July 18, 2013

இரண்டு இளைஞர்களை முட்டித்தள்ளிய சுரேஷ் எம்.பி.யின் வாகனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வாகனம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் தொண்டைமானாறு வல்லைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சி.கிருசாந் (வயது-24)அ.விமலநாதன் (வயது -24) மந்திகை புலோலி ஆகிய இருவருமே படுகாயமடைந்தவர்களாவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற சுரேஷ் எம்.பி.யின் பிக்கப் ரகவாகனமும், பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த குறித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிளும் தொண்டைமனாறு வல்லைச் சந்தியில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் உடனடியாகவே மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment