Wednesday, July 10, 2013

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் மனுவை விசாரிக்க முடியாது –நீதவான்

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் நீதிமன்றத்தால் மனுவை விசாரிக்க முடியாது என, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித் துள்ளார். ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத, பிரித் தானிய பிரஜையின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கோரி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் தாக்கல் செய்ய ப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, கொழும்பு கோட்டை நீதவான், மேற்கண்டவாறு தெரிவி த்தார்.

பிரித்தானிய பிரஜையான ஹெலன் ஜோன் 17202 ரூபாவிற்கான கட்டணத்தை செலுத்தாது ஹோட்டலிலிருந்து வெளியேறிவிட்டதாக, கொழும்பு கிரேன் ஒரியன்டல் ஹோட்டல் முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மனு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த மனுவை நிராகரித்த நீதவான், உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் வழக்கை விசாரிக்க முடியாது என்றும், கடவுச்சீட்டை கேட்டு கடவுச்சிட்டு உரிமையாளர் மாத்திரமே மனுத்தாக்கல் செய்யவேண்டுவும் எனவும், உயர்ஸ்தானிகராலயம் அல்ல என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com