Saturday, July 13, 2013

அம்மன் கோயில் உடைத்து 75 பவுண் நகை கொள்ளை!

கரணவாய் கிழக்கு புவனேஸ்வரி உச்சியம்மன் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு வேளை கோயிலின் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்தின் பணப் பெட்டகத்தை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் உடைத்து அங்கிருந்து 75 பவுண் நிறையுடைய தங்க நகைகளை களவாடிக்கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் களவாடப்பட்டுள்ளது. பூசகர் அதிகாலை பூசைக்காக கோயில் கதவைத் திறந்து பார்த்தபோதே நகைகள் களவாடப்பட்டமையும், ஆலய பின் கதவு திறந்திருந்தமையும் தெரியவந்தது.

இக்கோயில் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்கதாகக் காணப்படும் நிலையில் இவ் ஆலயத்தில் களவு நடைபெற்றமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment