Friday, July 26, 2013

கடலில் தத்தளித்த 73 இலங்கையர்கள் காலி துறைமுகத்தில்!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்த 17 சிறுவர்கள் மற்றும் 10 பெண்கள் உட்டபட்ட 73 பேர் இன்று(26.07.2013) காலை 8.00 மணியளவில் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்கள் என்பதுடன் மிரிஸ்ஸ கடற்பரப்பின் ஊடாக இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா நோக்கி பயணத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment