Monday, July 1, 2013

கருக்கலைப்பு வழக்கு தொடர்பில் விசேட வைத்தியர் 6 ஆம் திகதி நீதிமன்றிற்கு...!

கருக்கலைப்புச் செய்வதற்காக பெண் பொலிஸ் அதிகாரி யொருவருக்கு மருந்து வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள கொழும்பு த சொய்ஸா வைத்திய சாலையின் விசேட வைத்தியர் சிரில் ரந்தெனிய எதிர்வரும் 06 ஆம் திகதி மேல்நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஐரங்கனி பெரேரா அழைப்பாணை விடுத்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் உயிரைக் காப்பதற்காகச் செய்கின்ற கருக்கலைப்பன்றி , பிறிதொரு தேவைக்காக கருக்கலைப்பு செய்யப்பட்டதாக பேராசிரியர் ரந்தெனியவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அவரது தாதியாகப் பணியாற்றிய காலோச்சனா மெணிக் குமாரி என்பவருக்கும் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை ஒட்டிய திகதியொன்றில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு தெமட்டகொடையில் முறைகேடான கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றில் தேடுதலுக்கு அதிகாரம் பெற்றுக்கொண்டு தேடல் வேட்டையில் ஈடுபட்ட போதே இந்த உண்மை வெளிவந்தது என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com