Friday, July 19, 2013

களியாட்ட விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட 6பெண்கள் உட்பட 8 பேர் கைது

கட்டுநாயக்க சீதுவை பகு­தியில் அமைந்­துள்ள களி­யாட்ட விடு­தி­யொன்றில் நேற்று அதி­காலை 1.00 மணி­ய­ளவில் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­று­கை­யின்­போது விப­சா­ரத்தில் ஈடு­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் ஆறு பெண்கள் உட்­பட எட்டு பேரை திட்­ட­மிட்ட குற்றம் மற்றும் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வினர் கைது­ செய்­துள்­ளனர்.

இது தொடர்பில் திட்­ட­மிட்ட குற்றம் மற்றும் போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரி.கணே­ச­நாதன் சீதுவைப் பகு­தியில் அமைந்­துள்ள இரவு நேர களி­யாட்ட விடு­தியில் விபசாரம் உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்கள் இடம்­பெ­று­வ­தாக கிடைத்த தக­வ­லை­ய­டுத்து குறித்தகளி­யாட்ட விடு­தி­யினை நேற்று அதி­காலை முற்­று­கை­யிட்­டனர் எனக்குறிப்பிடார்.

இங்கு விசேட பிர­தி­நி­தி­க­ளுக்­கான 25 ஆயிரம் ரூபா பெக்கேஜ் முறை­ காணப்­படுவதுடன் பெக்கேஜ் ஒன்­றினை களி­யாட்ட விடு­தியில் பெற்றுக் கொண்டால் உயர் ரக மது­பா­னங்கள் மற்றும் பெண்கள் விபச்­சா­ரத்­துக்­கா­கவும் வழங்­கப்­ப­டு­வதுடன் விபச்­சா­ரத்­துக்­காக வரும் பெண்­ணுக்கு 6 ஆயிரம் ரூபாவை வாடிக்­கை­யா­ளர்கள் வழங்க வேண்டும்.

இத­னூ­டாக எமது அதி­கா­ரிகள் குறித்த களி­யாட்ட விடு­தியை முற்­று­கை­யிட்ட போதே ஆறு பெண்­களும், இரண்டு ஆண்­க­ளையும் கைது­ செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தினோம் எனக்குறிப்பிட்டார்.

இப்­பெண்கள் அனைவரும் அநு­ரா­த­புரம் மற்றும் பதுளை ஆகிய பகு­தி­களை சேர்ந்தவர்கள். ஆடைத் தொழிற்­சா­லை­களில் பணி­யாற்­று­வ­தாகக் கூறியே மேற்­படி களி­யாட்ட விடுதியில் பணி புரிந்துள்ளது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆ ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார் என்று குற்றம் மற்றும் போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரி.கணே­ச­நாதன் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com