Friday, July 19, 2013

யாழில் கடைகள் உடைத்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

யாழ்.முனியப்பர் வீதியில் நடைபாதை கடைகள் நேற்றிரவு உடைக்கப்பட்டு சுமார் 50 லட்சம் ரூபாவிற்கு அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில் 5 கடைகள் உடைக்கப்பட்டுள்ள அதேவேளை உடைக்கப்பட்ட கடைகளிலிருந்து பொருட்களை திருடர்களால் கொண்டு செல்ல முடியாமல் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் இந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பவத்தைக் கண்டித்து நடைபாதை வியாரிகள் ஒரு நாள் அடையாள கடையடைப்பை மேற்கொண்ட இதே வேளை இந்தச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment