Thursday, July 11, 2013

இந்தியா இலங்கை இறுதிப்போட்டி இன்று! 400வது ஒருநாள் போட்டியில் விளையாடும் மகேலா!

மீண்டும் எதிர்பார்த்த இறுதிப் போட்டி. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இளம் கேப்டன்கள் ஆனால் திறமை மிக்கவர்களான ஆஞ்சேலோ மேத்யூஸ், வீரத் கோலி ஆகியோரில் இன்று வெல்லப்போவது யார் என்பது போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும்.

மழை லேசாக பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அச்சுறுத்தல் இல்லை. முழு போட்டி நடைபெறும் என்றே கூறப்படுகிறது. இதுவே இந்த ஆண்டு இலங்கை-இந்தியா மோதும் கடைசி போட்டியாகும்.

மகேலா ஜெயவர்தனே ஜெயசூரியாவுக்குப் பிறகு இலங்கையிலிருந்து 400வது ஒருநாள் போட்டியை விளையாடும் சாதனையை இன்று நிகழ்த்துகிறார். நிச்சயம் அவருக்கு இது ஸ்பெஷல் போட்டி.

டாஸ் முக்கியமானது. ஏனெனில் மழை பெய்த பிறகு பிட்ச் சற்றே பவுன்ஸ் அதிமாக எடுக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com