Thursday, July 4, 2013

சனல்-4 ஆவணப்படத்தை திரையிட ஏற்பாடு செய்தவர்கள் கைது!

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாதகமாக சித்தரித்த சர்ச்சைக்குரிய சனல்-4 ஆவணப்படத்தை திரையிட ஏற்பாடு செய்தவர்கள் மலேஷிய பொலிஸாரினால் கைது செய்யப்படடுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாதகமாக சித்தரித்த "யுத்த சூன்ய வலயம்" ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதென அறிந்துக்கொண்ட மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்ஸர், மலேஷிய அதிகாரிகளிடம் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் தகவலின் பிரகாரம் ஆவணப்படம் திரையிடப்படுவதை மலேஷியா அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதுடன், ஏற்பாட்டாளர்களையும் தடுத்து வைத்துள்ளனர். படத்தின் இயக்குநரான கலம் மக்றே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தபோதிலும் வெளிவிவகார அமைச்சரினால் அதனை உறுதிசெய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com