Monday, July 8, 2013

விபச்சார விடுதியில் பிறந்த குழந்தையை விற்கமுயன்ற பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை.

இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு இளம்பெண் தனக்கு விபச்சார விடுதியில் பிறந்த குழந்தையை விலைக்கு விற்றதையடுத்து, குறித்த 22 வயது பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக் கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவிலிருந்து துபாய்க்கு வேலை தேடி வந்த இப்பெண், சூழ்நிலை காரணமாக விபச்சார விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கர்ப்பமான இந்த பெண், கருவை கலைக்க மனமின்றி, அந்த விபச்சார விடுதியிலேயே ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட விரும்பாத இவர் திரும்பி இந்தோனேஷியாவிற்கே சென்றுவிட முடிவு செய்தார்.

ஆனால், விமான பயணச்சீட்டுக்கு பணம் இல்லாமல் போனதாலும், விபச்சார விடுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தரவேண்டுமென்ற எண்ணத்திலும், 6 மாத பெண் குழந்தையை ஒரு தம்பதிக்கு விற்க முயன்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com