Saturday, July 6, 2013

கட்டார் நாட்டைச் சேர்ந்தவரின் கடனட்டையிலிருந்து 3 கோடிக்கும் மேற்பட்ட பணத்தை திருடிய இலங்கையர்! பொலிஸார் வலை விரிப்பு

கட்டார் நாட்டைச் சேர்ந்த எஸ். எச். சுல்தான் ஜெஸ்மின் அல்ஹானி என்பவருக்கு விநியோகிக்கப்பட்ட கடனட்டை யொன்றிலுள்ள தரவுகளை பயன்படுத்தி மூன்று கோடியே 28 லட்சத்து 71,000 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இலங்கையிலுள்ள ஹட்டன் நஷனல் வங்கியின் ஏ. ரி. எம். இயந்திரங்களினூடாக இவர் இந்த பண மோச டியை செய்து வந்துள்ளார். இலங்கையிலுள்ள ஏ. ரி. எம். இயந்திரங்கள் மூலம் பணம் பெறும் இலங்கையரின் புகைப்படத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

படங்களில் காணப்படுபவர்கள் தொடரில் தகவல் தெரிந்திருப்பின் உடனடியாக 011-2422176 அல்லது 011- 2326670 அல்லது 011232041-145 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறியத் தருமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

1 comments :

Kalaimahan July 6, 2013 at 6:04 AM  

//கட்டார் நாட்டைச் சேர்ந்தவரின் கடனட்டையிலிருந்து 3 கோடிக்கும் மேற்பட்ட பணத்தை திருடிய இலங்கையரைத் தேடி பொலிஸார் வலை விரிப்பு!!//

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com