Wednesday, July 31, 2013

பஹ்ரைனில் விஷவாயு தாக்கி 3 தமிழர்கள் உயிரிழப்பு

பஹ்ரைனின் தெற்கு மனாமா பகுதியில் உள்ள அல் ஈகர் கிராமத்தில் உள்ள வீட்டல் இருந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மீத்தேன் விஷவாயு தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

இந்த வாயுத்தாக்குதலில் உள்ளே இறங்கி வேலை செய்துகொண்டிருந்த ஒருவரும் மேலே பார்த்துக்கொண்டிருந்த இருவரும் மயங்கி உயிரிழந்த தகவல் அரசின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளதுடன் செப்டிங் டேங்க் தொட்டியில் இறங்கும் போது பாதுகாப்பாக பொருட்களை அணிந்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தத்தாக்குதலில் முருகேசன் கோனார்(40), சண்முக ஜெகன்னாதன் (25) மற்றும் பால்ராசு அய்யாக்கண்ணு (23) ஆகிய மூவரும் பலியாகியுளனர்.

No comments:

Post a Comment