Thursday, July 11, 2013

27 வருடங்களின் பின் கோப்பாய் வளலாய் அக்கரை கிராமத்தில் மீள் குடியேற்றம்!

யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த கோப்பாய் வளலாய் அக்கரை கிராமம் 27 வருடங்களுக்கு பின் இன்று(11.07.2013) காலை பொதுமக்கள் மீள்குடியேற்றுவதற்காக இராணுவத்தால் பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

1986 ஆம் ஆண்டு நடைபெற்றயுத்தத்திற்குப் பின் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த கிராமம் 27 வருடங்களுக்கு பின் இன்று பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்து.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாவட்ட உதிவிச் செயலர் சுதர்சன், கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், இராணுவ உயரதிகாரிகள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதில் முதற்கட்டமாக இக்கிராமத்தில் வாழ்ந்த 38 குடும்பங்கை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அம்மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பிரதேச செயலாளர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment