Monday, July 29, 2013

23 வருடம் படையினரிடம் இருந்த புதிய கடற்கரை வீதி திறப்பு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 23 வருடங்களாக படையினர் வசமிருந்த யாழ்ப்பாணம் குருநகர் வடக்கு றெக்கமளேஷன் வீதி என அழைக்கப்பட்ட புதிய கடற்கரை வீதி நேற்று(28.07.2013) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் காரணமாக குறித்த வீதியை மூடிபடைத்தரப்பினர் முகாமிட்டதை தொடர்ந்து குறித்த வீதியூடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாதநிலை இருந்தநிலையில் குறித்த வீதியை தமது பாவனைக்காக திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடியதன் பயனாக குறித்த வீதி 23 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்வீதியூடாக இன்று அல்லது நாளை முதல் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் வீதியிலுள்ள தடைகளை அகற்று மாறு அமைச்சர் படைத்தரப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment