Tuesday, July 2, 2013

மதுபோதையில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இலங்கை கிரிக்கெட் வீரர்! 229 பயணிகள் மயிரிழையில் உயிர்தப்பினர்.

மதுபோதையில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரொருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமை யினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் கதவையே மதுபோதையில் இருந்த இலங்கை வீரரொருவர் திறக்க முயன்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

போயிங் 777 என்ற விமானத்தில் பயணம் செய்த பயணியான இவர் சென். லூக்காவிலிருந்து லண்டன் கெட்வீக் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு முயற்சித்துள்ளார். அந்த விமானத்தில் 229 பயணிகள் பயணம் செய்துக்கொண்டிருந்ததுடன், இந்த கிரிக்கெட் அணியினர் திங்கட்கிழமை காலையில் விமானத்தில் ஏறியுள்ளனர். மலசல கூடத்தின் கதவென நினைத்தே தான் அந்த கதவை திறப்பதற்கு முயன்றதாக குறிப்பிட்ட வீரர் விமான பணியாளர்களிடம் பின்னர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானம், சென்.லூக்காவிலிருந்து கெட்விக் விமான நிலையத்தை சென்றடை வதற்கு 8 மணித்தியாலம் எடுக்கும் என்பதுடன், விமானம் தரையிறங்குவதற்கு ஒருமணித்தியாலத்திற்கு முன்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com