அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமானது, அரசியலமை ப்பிற்கு முரணானது இல்லையென்று தெரிவித்து, 21 ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரி த்துள்ளது.
13 ஆவது திருத்தத்தை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட 21 ஆவது திருத்தத்திற்கு எதிராக, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுதொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபைநாயகர் சந்திம வீரக்கொடி நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
No comments:
Post a Comment