எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளமுடியும் என இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
1919 தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொண்டு தமக்கு உரிய மாவட்டத்தையும், தேசிய அடையாள அட்டை எண்ணையும், முழுப் பெயரையும் அறிவித்து தமது வாக்குரிமை வழங்கும் பகுதியின் பெயரையும் மாவட்ட எண்ணையும் வாக்காளர் பட்டியலிலுள்ள தமது வரிசை எண்ணையும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் தேர்தல் திணைக்களமும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தியுள்ளன
No comments:
Post a Comment