Sunday, July 7, 2013

எல்.ரி.ரி.ஈ னருக்கு உதவிய இலங்கையருக்கு அமெரிக்க நீதிமன்றம் 15 வருட சிறை விதித்தது!

எல்.ரி.ரி.ஈ னருக்கு, கனேடிய இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைத் பெற்றுக் கொடுத்தமை தொடர்பான குற்றத்தை ஒப்புக் கொண்ட சுரேஷ் ஸ்கந்தராஜா என்பவருக்கு அமெரிக்க நியுயோர்க் நீதிமன்றம் ஒன்று 15 வருட காலச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

இது தொடர்பில் கனடாவின் "நெஷனல் போஸ்ட்" வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த நபர் எல்.ரி.ரி.ஈ னருக்கு விமானங்களுக்கான உதிரிப்பாகங்கள், சப்மெரின் மற்றும் கனேடிய நவீன தொழில் நுட்பக் கருவிகள் போன்றனவற்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கில் ஆறு பேர் சந்தேக நபர்களாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவரே சுரேஷ் ஸ்கந்தராஜா என்பவராவார். இவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனையடுத்தே இவருக்கு நியுயோர்க் நீதிமன்றம் ஒன்று 15 வருடச் சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment