Monday, July 8, 2013

13ஆவது திருத்தம் பற்றி பேசுவது தமிழ் மக்களுக்கு பயனில்லாத ஒன்று! சி.க.சிற்றம்பலம்.

"தனிநாட்டுக் கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது"

தனிநாட்டுக் கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது எனவும், சமஷ்டி ஆட்சியின் மூலமே தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கும் என தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 13ஆவது திருத்தத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கையில் எடுத்து வைத்துக் கொண்டு மாகாண சபை அதிகாரம் குறித்து பேசுவது தமிழ் மக்களுக்கு பயனில்லாத ஒன்று எனவும், மாகாண சபை அதிகாரங்கள் வெறுமனே இருக்கின்ற பொழுது மாகாண சபை தேர்தலில் போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 5 கட்சிகளும் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பதை சிந்திக்க வேண்டும். யுத்தம் முடிந்த 4 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்த 5 கட்சிகளும் தமிழர்களின் தீர்வு இதுதான் என ஏன் கூறவில்லை? ஏன் அதற்கான தீர்வினை முன்வைக்கவில்லை? என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் சிற்றம்பலம் மேலும் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  July 8, 2013 at 6:39 PM  

As the senior member and the vice president of the Fed party
or tamil Arasu party,let him come out
what he or his party had politically
achieved during the past.Negative comments always a common one in their political career.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com