Friday, July 5, 2013

13 ஆவது திருத்தத்தினால் உருவாகும் பாரிய விளைவுகள் என்ன? விளக்குகின்றார் கோத்தபய ராஜபக்ஷ

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கிணங்க மாகா ணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் தேசிய பொலிஸ் 9 ஆக உடையும் எனவும், 9 மாகாணங்களிலும் 9 பொலிஸ் உருவாகும் இதனால் பொலிஸ் நிலையங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்குள்ள அதிகாரம் இல்லாமல் போகும் எனவும், நாடு குழம்பிப் போவதோடு பொலிஸ் அரசியல் மயமாவதை தடுக்க முடியாது என, பாதுகாப்பு மற்றும் நகர அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு மாகாணத்திலும் முதலமைச்சர்களின் கீழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் மாகாண பொலிஸ்கள் இயங்குவதால், ஆட்சேர்ப்பும் பொலிஸ் அதி காரத்தின் கீழ் காணப்படுகின்றது. இதன் மூலம், இன ரீதியான பொலிஸ் நிலை யங்கள் உருவாகும் அபாயம் எழும் எனவும், கோத்தபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இதனால் நாட்டில் பிரிவினை வாதம் தலைதூக்கும், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏதும் தவறு செய்தால் அவரை விசாரிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் மாகாண முதலமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும். அவரை விசாரிப்பதும் விசாரிக்காமல் இருப்பதும் முதலமைச்சரின் விருப்புப் படியே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதன் மூலம் தேசிய பொலிஸ் சேவை துண்டுகளாக பிரிக்கப்படும். 75 ஆயிரம் பொலிஸாரும் மாகாணங்களுக்கு பிரிந்து செல்வதன் மூலம் பொலிஸ் தலைமையகத்தில் 600 பொலிஸாரே எஞ்சுவர் எனவும் பொலிஸ் ஆயுதம் தரித்திருப்பதன் மூலம் மாகாணங்கள் தனியான ஆட்சியில் ஈடுபட ஆயுதப் போராட்டத்தில் குதிக்கும் அபாயமும் உள்ளது. பொலிஸ் அதிகாரம் வழங்குவதன் மூலம் நாட்டில் மீண்டும் பிரிவினை ஏற்பட்டு யுத்தம் ஏற்படும் சூழல் ஏழலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment