Friday, July 12, 2013

பன்முக எழுத்தாளர் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மானின் ‘அருள்மழை பொழியும் ரமழான்’ நூல் வெளியீடு நாளை (13)

பன்முக எழுத்தாளர் கலாபூசணம் வெலிகம எம். ஏ. ஹபீபுர் ரஹ்மான் எழுதியுள்ள ‘அருள்மழை பொழியும் ரமழான்’ நூல் வெளியீடு, நாளை சனிக்கிழமை (13) பி.ப. 12.30 இற்கு வெலிகம புதியதெரு றௌலத்துல் அத்பால் மத்ரஸா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வெலிகம ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் பணி்ப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியு. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) சிறப்புரையாற்றுவார்.

காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.எம். ளபர் (பஹ்ஜி,மதனி) நூல் அறிமுகவுரை நிகழ்த்தவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வில் விசேட மற்றும் கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment