Wednesday, July 3, 2013

சீ. சீ. ரி. வி. கெமராவால் கள்வனுக்கு வந்த வினை!! எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்.

அக்கரைப்பற்று தனியார் வங்கியென்றின் ஊழியரின் மோட் டார் சைக்கிளை திருடிய நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த தனியார் வங்கிக்கு பின்னால் உள்ள வாகன தரிப்பிடத்தில் வங்கி ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு கடமைக்கு சென்றுள்ளார்.

பகல் சாப்பாட்டுக்கு செல்வதற்காக பகல் 1.00 மணியளவில் வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது அதனை காணவில்லை. இதனையடுத்து குறித்த நபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து வாகன தரிப்பிடத்தில் பொருத்தப் பட்டிருந்த சீ. சீ. ரி. வி. கெமராவில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடியவரை அடையாளம் கண்டு பொலிஸார் மறுநாள் வெள்ளிக்கிழமை அவரை கைது செய்தனர்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் பாகங்களும் பிரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றியதையடுத்தே நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் அக்கரைப்பற்று பதுர் நகர் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இவர் மெக்கானிக்காகவும் தொழில் புரிந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com