Tuesday, July 2, 2013

பொட்டு அம்மான் ஒழித்துவைத்திருந்த 1 தொன் பாரமுடைய இரு குண்டுகள் அவிஸ்ஸாவலையில் கண்டுபிடிப்பு!

கொழும்பு அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் நாசத்தை ஏற்படுத்துவதற்காக எல்.ரீ.ரீ.ஈ இயங்கிய காலகட்டத்தில் கொண்டு வந்து புதைக்கப்பட்டுள்ள இதுவரை கண்டுபிடிக்கப்படாத எடையுடைய – ஒரு தொன்நிறையுடைய குண்டுகள் இரண்டு அவிஸ்ஸாவலைப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரினால் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பயங்கரவாத விமர்சனப் பிரிவினரால் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வுத் துறையின் தலைவர் பொட்டு அம்மானின் கட்டளையின் பேரில், இந்த அதி சக்தி வாய்ந்த குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாக வன்னியில் வசிக்கும் பாலசுப்ரமணியம் ராஜேந்திர குமார் மற்றும் யோகராஜா நிரோஷன் என்போர் குறிப்பிட்டுள்ளதுடன் செய்திவெளியிட்டுள்ளதுடன், தற்போது கடங்காவற் சிறையில் இருக்கின்ற இவ்விருவரையும் பயங்கரவாத விமர்சனப் பிரிவினர் வசம் மூன்று நாட்களுக்கு ஒப்படைக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com