Wednesday, July 3, 2013

மருதமுனை றகுமான் ஏ.ஜமீலின் "காற்றை அழைத்துச் சென்றவர்கள்" என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06.07.2013.

மருதமுனை கவிஞர் றகுமான் ஏ.ஜமீல் எழுதிய "காற்றை அழைத்துச் சென்றவர்கள்" என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06.07.2013 காலை 9.30 மணிக்கு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற வுள்ளது.

மருதமுனை அல்-மதீனா வித்தியாலய அதிபரும், கவிஞருமான ஏ.ஆர்.நி.மத்துல்லாஹ் தலைமையில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதுடன் இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் (துல்சான்) முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் இணைப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதுடன் சிறப்பு அதிதிகளாக தென் கிழக்கு பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம்,பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்,ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(எம்.எம்.ஏ.காதர்)



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com