Saturday, June 29, 2013

விநாயகபுரத்தில் நடைபெற்ற "பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்" நிகழ்வு (படங்கள் இணைப்பு)

"பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்" எனும் தொனிப் பொருளில் ஒகஸ்பாம் நிறுவனத்தினரின் நிதியுத வியின் கீழ் சுவாட் நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் சமுதயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் (27 ) மாலை 2.00 மணியளவில்விநாயகபுரம் சுப்பர் ஸ்டார் மைதான அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரிகள், AWF நிறுவன அதிகாரிகள், உட்பட சொண்ட் நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு கலை நிகழ்சிகளும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

No comments:

Post a Comment