Monday, June 3, 2013

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஆளில்லா உளவு விமானம்!

இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொறை மொரட்டுவ பல்கலைக்கழ பொறியியல் பீடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தவிமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹனவும் இணைந்து இந்த ஆளில்லா உளவு விமானத்தை தயாரித்துள்ளனர்.

இந்த விமானம் 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது என பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அனுசரணையாளர்களின் உதவியுடன் விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com