Monday, June 3, 2013

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! மனைவியை வெட்ட முயன்ற கணவன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் மினுவாங்கொட, எல்லங்கல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை செய்ய முற்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மினுவாங்கொட எல்லங்கல பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார், வீடொன்றின் அறைக்குள் வைத்து பெண்ணை கத்தியால் வெட்ட அவரது கணவர் முற்படுவதை அவதானித்துள்ளனர்.

அதனை நிறுத்துமாறு பொலிஸார் கோரிய போதிலும் அவர் அதனை மறுத்துள்ளதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். அதனையடுத்து குறித்த பெண்ணை அந்நபரிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு பொலிஸார் அந்நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment