Wednesday, June 26, 2013

அரசியல் கைதிகள் என எவரும் தடுத்து வைக்கப்படவில்லை: புனர்வாழ்வு அமைச்சர்

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் தடுத்து வைக்கப் படவில்லை என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

இதே வேளை புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களும் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய புலி உறுப்பினர்கள் 810 பேர் மடடுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல் கைதிகள் யாரும் கிடையாது எனவும், கொலை உள்ளிட்ட பாரிய குற்றச் செகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்கள் உடைய புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதனை மனித உரிமை மீறலாக கருத முடியாது என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com