Sunday, June 30, 2013

முஸ்லிம் வைத்தியர்கள் சிங்கள கர்ப்பிணிகள்மீது அதிகசிரத்தை காட்டுவதில்லை... - துஷார சுவர்ணதிலக

இன, மத வேறுபாடின்றி சிங்கள துறைசார் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சிற்றூழியர்கள் வரை முஸ்லிம் பெண்கள் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பதற்கும், நான்கு ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கும் பல்வேறு உதவிகளைப் புரிகின்ற போதும், சிங்களப் பெண்கள் குழந்தைப் பேற்றுக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்தால் அவர்களுக்கு அன்பு கலந்த கவனிப்பு வழங்கப்படுவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் துஷார சுவர்ணதிலக குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபையின் பல்லேகல தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி பெரியாஸ்பத்திரியில் முஸ்லிம் பெண்ணொருத்தி ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை முதலானவை சிங்கள துறைசார் விசேட நரம்பியல் வைத்தியர் ஒருவரினாலும், இளம் சிங்கள வைத்தியர்களினால் குழுவினராலுமே செய்யப்பட்டது எனக் குறிப்பிட்ட துஷார சுவர்ணதிலக, சிங்களவர்கள் ஒருபோதும் இனவாதிகளாக செயற்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

ஐந்து குழந்தைகளின் தாய் ஓர் உதாரணம் மட்டுமே என்று குறிப்பிட்ட துஷார, பேராதனை வைத்தியசாலைக்கு குழந்தைப் பேற்றுக்காகச் செல்லக்கூடிய சிங்களப் பெண்கள் முஸ்லிம் வைத்தியர்களால் சரிவரக் கவனிக்கப்படுவதில்லை. அவர்கள் விரும்பாமலேயே அவர்களுக்கு சில அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் பேராதனை வைத்தியசாலையில் அவ்வாறானதொரு சிகிச்சையும், கர்ப்பிணித் தாயொருவர் தாக்கப்பட்டமையும் குறித்து விசாரணை நடாத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்ட கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் சுவர்ணதிலக குறிப்பிட்டார்.

நாளை (01) ஓய்வுபெறவுள்ள கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் இன்றேனும் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காதுவிட்டால், அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் சுவர்ணதிலக குறிப்பிட்டார்.

-திவயின(கேஎப்)

No comments:

Post a Comment