Friday, June 28, 2013

முச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை வேட்டையாடும் சாரதிகள்! பொலிஸார் எச்சரிக்கை

முச்சக்கரவண்டிக்குள் கண்ணாடியை பொருத்தும் முச்சக் கரவண்டி சாரதிகள், முச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை பார்த்து ரசிக்கின்றார்கள் எனவும், அவ்வாறு முச்சக்கரவண்டிற்குள் கண்ணாடி பொருத்தப் பட்டிருந்தால், அவ்வாறான முச்சக்கரவண்டிகளில் பெண் களை அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டுமென மத்துகம பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

முச்சக்கரவண்டிக்குள் கண்ணாடியை பொருத்தும் முச்சக்கரவண்டி சாரதிகள், முச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை பார்த்து ரசிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே அவர் மேற்கண்டவாறு பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முச்சக்கரவண்டியில் பக்கவாட்டு கண்ணாடிகள் இரண்டும் நடுவில் ஒரு கண்ணாடி இருப்பது மட்டும் போதுமென்றும் தெரிவித்த பொலிஸார், இவ்வாறு கண்ணாடி பொருத்தப்பட்ட 19 முச்சக்கரவண்டிகளை தாம் மத்துகம பகுதியில் கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com